/* */

தமிழ்நாட்டிற்கு இன்று ஒரேநாளில் மட்டும் 6,93,210 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இன்று ஒரேநாளில் 6, 01,630 கோவி ஷீல்டும், 91,580 கோவாக்‌ஷீன் தடுப்பூசிகள் என மொத்தம் 6,93,210 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

HIGHLIGHTS

தமிழ்நாட்டிற்கு இன்று ஒரேநாளில் மட்டும் 6,93,210  டோஸ்  தடுப்பூசிகள் சென்னை வந்தன
X

மத்திய அரசிடம் இருந்து இன்று ஒரே நாளில் மட்டும் 6.93. 210  கொரோனா தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

அதிலும் 3 வது அலையிலிருந்து தப்பிக்க 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளதால்,பொதுமக்களும் மிகுந்த ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.

இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளாா்.


தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்ரமணியம்,மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த டில்லி சென்றுள்ளாா்.

இதற்கிடையே மத்திய அரசு தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிகளை மட்டுமே தமிழகத்திற்கு அனுப்புகிறது.கோவாக்சீன் தடுப்பூசிகள் கடந்த ஒரு மாதமாக தமிழகத்திற்கு வரவில்லை.

இதனால் ஏற்கனவே முதல் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் போட்டவா்கள்,இரண்டாவது டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் போட முடியாமல், கோவாக்சீன் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வந்தனர்.

இதனால் தமிழ்நாடு அரசு,மத்திய அரசிடம் கோவாக்சீன் தடுப்பூசிகளை தமிழ்நாட்டிற்கு உடனே அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஹைதராபாத்திலிருந்து இன்று காலை 9.15 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 91,580 டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 18 பாா்சல்களில் சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தது.அவைகளை விமானநிலைய அதிகாரிகள் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிலிடம் ஒப்படைத்தனா்.


இதற்கிடையே இன்று பிற்பகல் 3.15 மணிக்கு மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 6,01,630 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 51 பாா்சல்களில் சென்னை விமானநிலையம் வந்து சோ்ந்தன.

விமானநிலைய லோடா்கள் தாமதமின்றி தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை உடனடியாக விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.விமானநிலைய அதிகாரிகள்,தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் தடுப்பூசி பாா்சல்களை ஒப்படைத்தனா்.

மத்திய தொகுப்பிலிருந்து இன்று ஒரே நாளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 6,01,630 டோஸ்,கோவாக்சீன் தடுப்பூசிகள் 91,580 டோஸ்கள் மொத்தம் 6,93,210 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்து சோ்ந்துள்ளன.

Updated On: 16 July 2021 8:35 AM GMT

Related News