/* */

சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர் உத்தரவு

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் - செங்கல்பட்டு ஆட்சியர்.

HIGHLIGHTS

சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்: ஆட்சியர் உத்தரவு
X

சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். 

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளினால் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனையடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000/- அபராதம் விதிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி வாரியாக கால்நடை பட்டிகளை நிறுவி கால்நடைகளை அதில் அடைத்து அபராதம் பெற்றபின் உரிமையாளரிடம் ஒப்படைக்க இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு மேல் ஆகியும் உரிமையாளர் எவரும் வரவில்லை எனில் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள கொண்டமங்கலம் பகுதியில் உள்ள மாவட்ட அளவிலான பட்டிக்கு மாடுகள் மாற்றம் செய்யப்படும் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 Jan 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க