/* */

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி தீவிரம்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை  தயார் செய்யும் பணி தீவிரம்
X

செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை குறைக்க தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் என்னென்ன செய்வது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு ,மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்காள் செல்வதன் காரணமாக தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் எந்நெந்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது, மக்கள் அதிக அளவில் சாலையை கடக்கும் பகுதிகள், சிக்னல் எங்கெங்கு பொருத்தவேண்டும் என்றவற்றை ஆய்வறிக்கையாக சமர்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று, வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் பகுதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மக்கள் அதிக அளவில் சாலையை கடக்கக்கூடிய மஹேந்திராசிட்டி தொழிற்பூங்கா சாலை, சிங்கப்பெருமாள்கோயில், மறைமலை நகர் தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில் சிக்னல் அமைப்பது, சாலை தடுப்புகள் அமைப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 9 July 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  4. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  5. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  6. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  7. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  8. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  9. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  10. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை