Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,279 பேருக்கு கொரோனா : 20 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 1,629பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 419 ஆக உள்ளது.
சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1052-ஆக உயர்ந்தது. இதில் 97ஆயிரத்து 395 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.