/* */

கேபிள் டிவி ஆப்ரேட்டர் கடத்தி கொலை, மர்மநபர்கள் வெறிச் செயல்

கேபிள் டிவி ஆப்ரேட்டரை கடத்தி சென்று வெட்டி கொலைசெய்து, கூடுவாஞ்சேரி அருகே ரயில் தண்டவாளத்தில் உடல் வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் மணிமங்கலம் அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (36). இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் கேபிள் டிவி நிறுவனத்தில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு அமுதா என்ற மனைவி, ஹர்ஷினி(7) தர்ஷினி(4) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நாராயணமூர்த்தி நேற்று வேலைக்கு சென்றவர் இரவு வரை வீடு திருப்பவில்லை.

அனைவி அமுதா பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் இன்று அதிகாலையில் கூடுவாஞ்சேரி பொத்தேரி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில்வே தண்டவாளத்தில் நாராணமூர்த்தியின் உடல் வெட்டுக்காயங்களுடன் கிடந்தது.

உடனடியாக அதைப்பார்த்த பொதுமக்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, உடல் ரயில்வே தண்டவாளத்தில் கிடக்கிறது. எனவே தாம்பரம் ரயில்வே போலீஸ் தான் வந்து உடலை எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

தாம்பரம் ரயில்வே போலீசார் வந்து பார்த்தனர். ரயிலில் அடிப்பட்டு இறந்தால் மட்டுமே நாங்கள் உடலை எடுத்து விசாரணை நடத்துவோம்.ஆனால் இது வெளியில் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர்.

எனவே கூடுவாஞ்சேரி போலீஸ் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவிட்டனர். இதனால் சில மணி நேரம் உடல் அகற்றப்படாமல் தண்டவாளங்கள் அருகிலேயே கிடந்தது.

அதன்பின்பு காலை 8.30 மணிக்கு மேல் தாம்பரம் ரயில்வே போலீசார் வந்து உடலை எடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். அதோடு நாரயணமூர்த்தியை கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசிய கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

Updated On: 4 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  2. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  3. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  5. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  6. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  7. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  8. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  9. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!