Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி 5 -வது வார்டு உறுப்பினருக்கு 12 பெண் வேட்பாளர்கள்
காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி 5 -வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. காட்டாங்குளத்தூர் 5வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மோகனப்பிரியா, மாலதி, சிரிலா, ஆகிய மூன்று பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேட்சை வேட்பாளர்களாக மணிமேகலை, சூடாமணி, ஜீனத் ஆகியோர் களம் காண்கின்றனர்.
திமுக சார்பில் பூங்கோதை, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பெல்வின்நைட், நாம்தமிழர் கட்சி சார்பில் கோமதிமோகன், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வனிதா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விஜயகுமாரி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சங்கீதா ஆகிய 12 பெண்கள் போட்டியிடுகின்றனர்.