/* */

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்த முயன்ற 19 வயது இளைஞர் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (19). இவர் இலையூர் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த சில தினங்களாக காதலித்ததாகவும், இதனை அறிந்த மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை இளைஞர் திருமணம் செய்ய ஆசை வார்த்தைகள் கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து இளைஞர் மாணவியின் குடும்பத்தை மிரட்டியதாகவும், திருமணம் செய்ய ஒப்புகொள்ள மறுத்ததால் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மாணவியின் குடும்பத்தார் இதற்கு அஞ்சாததால், சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக செந்தில்குமார் கடத்த முயன்றுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் செந்தில்குமாரை பிடித்து விசாரணை செய்து அவர் மீது வழக்குப் பதிந்து கொலை மிரட்டல் மற்றும் போக்சோ சட்டத்தில் கீழ் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை கடத்த செந்தில்குமாருக்கு உடந்தையாக இருந்த, இலையூர் கிராமத்தைச் சேர்ந்த அவரது அக்காள் சித்ரா, இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் பூவரசன், செல்வகுமார் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  4. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  5. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  6. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  7. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  8. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?