/* */

உடையார் பாளையம்: கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா

உடையார் பாளையம்: கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா மிக சிறப்பாக நடந்தது.

HIGHLIGHTS

உடையார் பாளையம்: கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா
X

உடையார் பாளையம் அருகே கண்ணணூர் மாரியம்மன்கோவில் தெப்ப திருவிழா நடந்தது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டிக்கரை கீழக்கரையில் கண்ணனூர் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி காஞ்சிவார்த்தல், ஊரணி பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். 23-ந் தேதியன்று இரவு அம்மன் வீதியுலாவும், 24-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 25-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 26-ந் தேதி மகா அபிஷேகம் மற்றும் சந்தன காப்பும் நடைபெற்றது.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் மகா மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கண்ணனூர் மாரியம்மனை எழுந்தருள செய்து, வேலப்பன் செட்டி ஏரியை சுற்றி தெப்பம் 3 முறை வலம் வந்தது.

இதில் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்திருவிழாவை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி குழு பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Updated On: 29 May 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  3. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  4. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  6. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  7. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  8. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  9. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  10. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...