/* */

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
X

செல்வகுமார்.

ஜெயங்கொண்டம் அருகே திருமணம் செய்து கொள்வதாக 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடங்கன்னி கிராமம் கீழத் தெருவை சேர்ந்த துரைவேம்பு மகன் செல்வகுமார் வயது (21). இவர் அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்றார். இதுகுறித்து அவரது உறவினர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். விசாரணையில் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவர்களை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தபோது, சிறுமியிடம் செல்வகுமார் ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து செல்வக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 28 May 2022 3:40 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!