/* */

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்

தா.பழூர் அருகே சிலால் நான்குசாலையில் கூழாங்கல் கடத்திவந்த லாரி பறிமுதல் : தப்பி ஓடிய ஓட்டுனருக்கு காவல்துறையினர் விசாரணை

HIGHLIGHTS

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்
X

லாரியில் கடத்தி வரப்பட்ட கூழாங்கல்

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் தப்பி ஓடிய ஓட்டுனரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சிலால் நான்கு சாலையில் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்ய முயன்றபோது. லாரியை ஓட்டி வந்த நபர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதனையடுத்து காவல்துறையினர் லாரியை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி 2 யூனிட் கூழாங்கல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து தா.பழூர் காவல் நிலையம் எடுத்து வந்தனர். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர், தப்பி ஓடிய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 Sep 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்