/* */

ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு

ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் ஆய்வு
X

ஜெயங்கொண்டத்தில்3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானபணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்..எஸ்..சிவசங்கர்பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழைய பேருந்து நிலையம் சேதமடைந்துள்ள நிலையில், அதன் அருகில் 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்து நிலையத்தின் வரைபடத்தின் மூலம் பேருந்து நிலையத்தின் வடிவமைப்பு குறித்து அதிகாரிகள் விளக்கினர்.

இதனையடுத்து பேருந்து பயணிகள் பயன்படுத்தக்கூடிய கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்படாதது குறித்து கேட்டறிந்த அமைச்சர் சிவசங்கர், பயணிகள் பயன்பெறும் வகையில் இவ்வகையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். இதற்கான கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பயணிகள் தங்குவதற்கான போதிய இடவசதி இல்லாததால், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Oct 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!