/* */

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனைசெய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட 5பேர்.

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேரை ஜெயங்கொண்டம் தனிபிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்டவைகளை தடுக்கும் பொருட்டு ஜெயங்கொண்டம் தனிப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் வசந்த் தலைமையில் தனிபிரிவு அமைத்தனர். அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரைச் சேர்ந்த கணேசன், அண்ணா நகரைச் சேர்ந்த சச்சின், நிஜந்தன், காமராஜர் நகரைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் இந்திரா காந்தி சாலையை சேர்ந்த ராஜா ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்து வந்த நிலையில், ஐந்து பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 2 July 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...