Begin typing your search above and press return to search.
7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது
அரியலூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலியன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது பெண் குழந்தையை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் அடித்து கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கடந்த 16 ஆம் தேதி பள்ளி முடிந்து வரும் போது அழுதுகொண்டே வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா (பொ) கலியனை கைது செய்து சிறையில் அடைத்தார்.