/* */

ஜெயங்கொண்டம் அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்

இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி பஞ்சாயத்துக்குட்பட்டது குறிச்சி கிராமம். இக்கிராமத்தையொட்டி பொன்னாற்று வாய்க்காலில் இருந்து ரங்கராஜபுரம் கிளை வாய்க்கால் மூலம், குறிச்சி, சோழமாதேவி, கண்டியன்கொல்லை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பாசன வாய்க்கால் செல்கிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வயல்களிலும் சாலைகளிலும் நீர் நிரம்பி உள்ளது. விவசாயிகள் தங்களது வயலுக்கு இடுப்பளவு தண்ணீரில் இடுபொருட்களை சுமந்து செல்லுகின்றனர்.

தற்காலிக ஏற்பாடாக ஒவ்வொரு ஆண்டும் ஊராட்சி நிர்வாகம் மூலம் மூங்கில் கழிகளை கொண்டு தட்டி பாலம் அமைத்து தரப்படும். தற்காலிக மூங்கில் தட்டிபாலம் மூலம் விவசாயிகள் நடந்து சென்றனர்.

இந்த ஆண்டு ஊராட்சியில் பணம் இல்லை எனக்கூறி பாலம் அமைத்து தரப்படவில்லை. ஆகையால் இந்த ஆண்டு விவசாயிகளே மூங்கில் பாலத்தை சீரமைத்து வைத்து விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர்.

தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மூங்கில் பாலம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் உள்ளது. விவசாயிகள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் சூழல் நிலை உருவாகி உள்ளது.

குறிப்பாக வயலுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பாலத்தில் செல்லும் போது கால்இடறி கீழேவிழுந்து விடுகின்றனர்.

மேலும் அதிக மழை பெய்யும் நேரத்தில் வயல்வெளிகளில் வெள்ளம் புகுந்து விவசாயம் பாழாகும் சூழல் ஏற்படுகிறது.

எனவே போர்க்கால அடிப்படையில் வயலுக்கு செல்லக்கூடிய பாதையை உயர்த்தி தார்சாலையாக அமைப்பதுடன், தற்காலிகமாக வருடம் தோறும் போடப்படும் மூங்கில் பாலத்தை அகற்றிவிட்டு அதில் நிரந்தர கான்கிரீட் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Oct 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது