/* */

மின்சார மசோதா 2021 கைவிட மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் மின்சாரவாரிய அலுவலகம் முன்பாக மின்சார மசோதா 2021-ஐ மத்தியஅரசு கைவிட மின்சாரவாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மின்சார மசோதா 2021 கைவிட மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார ஊழியர்கள். 

ஜெயங்கொண்டம் மின்வாரிய ஊழியர்கள், மின்சார வாரிய அலுவலகம் முன்பாக கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மின்சார மசோதா 2021 மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை, சிறு சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடக் கோரியும், விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பெற வழிவகை செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 திரும்பப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் .


Updated On: 19 July 2021 10:43 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு