/* */

ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்குகிறார் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரா.கலைச்செல்வி தலைமை வகித்தார். எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டு குறித்து மாணவர்களிடம் பேசினார். தொடர்ந்து, முன்னதாக கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் நகர்மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி மற்றும் கல்லூரி அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ம.ராசமூர்த்தி வரவேற்றார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் முனைவர் அன்பரசன் நன்றி கூறினார்.

Updated On: 30 April 2022 11:35 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்