/* */

லோடு ஆட்டோவில் இறந்து கிடந்த இளைஞர்: போலீசார் விசாரணை

வி.கைகாட்டி மண்ணுழி சாலையில் லோடு ஆட்டோவில், ஒருவர் இறந்து கிடந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

லோடு ஆட்டோவில் இறந்து கிடந்த இளைஞர்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மண்ணுழி சாலையில், லோடு ஆட்டோ நேற்று காலை முதல் நின்று கொண்டிருந்ததை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து, கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆட்டோ உள்ளே பார்த்த போது ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார், அரியலூர் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அரியலூர் மாவட்டம் த.பழூர் சாலை கீழவிளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் திருநாவுக்கரசு(30).இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ரேவதி (27) என்ற பெண்ணுடன் திருணம் நடந்து குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Jan 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’