Begin typing your search above and press return to search.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
HIGHLIGHTS
திருமானூர் அடுத்த செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் ஞானம்(31). இவர் அதே கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனை கடந்த 2018 ம் ஆண்டு, மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து, சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் வெங்கனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஞானத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி ஞானத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.