Begin typing your search above and press return to search.
அரியலூர் அருகே நூறு நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
அமீனாபாத் கிராமமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க கோரி செந்துறை சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுப்பட்டனர்.
HIGHLIGHTS
அரியலூர் அருகே நூறு நாள் வேலைக்கேட்டு, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமீனாபாத் கிராமமக்கள், தங்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும் எனக்கோரி செந்துறை சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராஜமூர்த்தி, கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.