Begin typing your search above and press return to search.
வள்ளலார் கல்வி நிலைய மாணவர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
வள்ளலார் கல்வி நிலைய மாணவர்களுக்கு சென்னை ரேகா ரப்பர் தயாரிப்பு கம்பெனி சார்பில் ரூ.1 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வியில் நிலையத்தில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு சென்னை ரேகா ரப்பர் தயாரிப்பு கம்பெனி சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அக்கம்பெனியின் உரிமையாளர் கே.எம்.கருணாநிதி பங்கேற்று, ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் 150 மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், மூன்று வேளை உணவுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, ரேகா சசிக்குமார் தலைமை வகித்தார். வள்ளலார் கல்வி நிலையச் செயலர் கோ.வி.புகழேந்தி, தலைமை ஆசிரியர் பெ.சௌந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.