/* */

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் ஆய்வு

மதுமட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாயவளர்ச்சிக்கு இளைஞர்களின்பங்கு முக்கியமானதுஎன்றார் அமைச்சர்

HIGHLIGHTS

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் ஆய்வு
X

அரியலூர் போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் 

அரியலூர் – மது மட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு முக்கியமானது என போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சர் குமாரி. பிரதீமா பூமிக் தெரிவித்தார்.

அரியலூரில் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மது போதை மறுவாழ்வு மையத்தினை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் குமாரி.பிரதீமா பூமிக் ஆய்வு செய்து, மையத்தின் செயல்பாடுகள், அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கூறியதாவது: அப்பொழுது போதை மட்டுமே வாழ்க்கை அல்ல. போதை பழக்கத்தால் குடும்பம் மற்றும் சமூகத்தால் நாம் ஒதுக்கி வைக்கப்படுகிறோம். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். சமுதாய மற்றும் சமூக வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் மறுவாழ்ழு சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வெளியே செல்லும்போது சமுதாய மற்றும் குடும்பத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நல்லவர்களோடு பழக வேண்டும் நல்லதை கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Updated On: 8 Oct 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்