/* */

இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவர் கைது

இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவரை அரியலூர் போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இணையம் மூலம் குறைந்த வட்டியில் கடன் தருவதாக ஏமாற்றிய இருவர் கைது
X

அரியலூரில் பெண்ணிடம் இணையம் மூலம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் குருவாடி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவரை சைபர் கிரைம் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக 2,13,700 ரூபாய் ஏமாற்றி உள்ளனர். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் அரியலூர் இணைய குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் அறிவுறுத்தல் படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் (இணைய குற்றப்பிரிவு) வழிகாட்டுதலின்படியும் அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன், சிவனேசன் (தொழில்நுட்பம்), காவலர்கள் சுரேஷ் பாபு மற்றும் சுதாகர் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

டெல்லி சென்று இணைய குற்ற மோசடியில் ஈடுபட்ட சதீஷ் என்கிற சதீஷ்குமார் (30), ஆரியன் என்கிற ஆனந்தன் (29) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1 மடிக்கணினி, 7 செல்போன்கள் மற்றும் 1,25,000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அரியலூர் கொண்டுவரப்பட்டது. மேலும் குற்றவாளிகள் வங்கி கணக்கில் இருந்த பணம் 58 ,579 ரூபாய் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விசாரணைக்கு பின் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 2 Aug 2022 7:03 AM GMT

Related News