அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது தீர்வு
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 370 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தமிழ் இணையக்கல்விக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் குறளோவியப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்ற அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவி செல்வி.அ.அபிராமிக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.