/* */

அரியலூரில் ஆடி கடை ஞாயிறையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூரில் பால்குடம், அலகுகாவடி எடுத்து மார்க்கெட் தெரு வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் ஆடி கடை ஞாயிறையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

அரியலூரில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் பலகிராமங்களிலும் ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல கோவில்களில் அம்மனுக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், தயிர், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

அரியலூர் நகரில் சேர்வைக்காரத்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். செட்டியேரி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, அலகுகாவடி எடுத்து அண்ணா சிலை, மார்க்கெட் தெரு வழியாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. திராளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On: 15 Aug 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  2. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  3. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  4. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  5. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  6. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்