Begin typing your search above and press return to search.
அரியலூர் ஊர்க்காவல் படையினருக்கு புத்துணர்வு பயிற்சி முகாம்
அரியலூர்மாவட்ட ஊர்க்காவல்படையினருக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தலைமையில் ஒருநாள் புத்துணர்வு பயிற்சிமுகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் ஹோட்டல் லயாவில் நடைபெற்றது.
புத்துணர்வு பயிற்சி முகாமில் அனைத்து ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிசுகளை வழங்கினார்.
இதில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமேனி, விஜயகுமார், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் உடன் இருந்தனர்.