Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி பிறந்ததின விழா
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தின் 78-வது பிறந்ததின விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 78வது பிறந்ததின விழா மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எஸ். எம். சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாநில குழு சிவகுமார், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட் பிரதிநிதி ரவிச்சந்திரன், பொன். முத்துக்குமரன், மகளிர் அணி ரேணுகாதேவி, சகுந்தலாதேவி, வார்டு தலைவர் ரகுபதி, ரவிச்சந்திரன், ரவிகருப்பையா, சரண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் அமானுல்லா நன்றி கூறினார்.