/* */

அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி, அரியலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, வரும் மார்ச் 28-29 ஆம் தேதிகளில், அகில இந்திய பொதுவேலைநிறுத்தம் நடத்த, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சம்மேளனங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் முன்னோட்டமாக, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் தனசிங், மணிகண்டன், தொ.மு.ச நிர்வாகிகள் கொளஞ்சி, சேகர் உட்பட சிஐடியு, உள்ளிட்ட சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

அரியலூரில் அண்ணாசிலை அருகில் அனைத்து தொழிற்சங்க சார்பாக வரும் 28,29, தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றிய விளக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி த.தண்டபாணி, தொ.மு.ச மகேந்திரன், சிஐடியு துரைசாமி, ஐஎன்டியூசி, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது வேலைநிறுத்தத்தை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, ஐஎன்டியூசி, தொமுச மத்திய சங்கம், சிஐடியு, எச்.எம்.எஸ். உட்பட தொழிற்சங்கத்தினர்100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 March 2022 7:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது