அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, வரும் மார்ச் 28-29 ஆம் தேதிகளில், அகில இந்திய பொதுவேலைநிறுத்தம் நடத்த, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு சம்மேளனங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் முன்னோட்டமாக, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட தலைவர் தனசிங், மணிகண்டன், தொ.மு.ச நிர்வாகிகள் கொளஞ்சி, சேகர் உட்பட சிஐடியு, உள்ளிட்ட சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
அரியலூரில் அண்ணாசிலை அருகில் அனைத்து தொழிற்சங்க சார்பாக வரும் 28,29, தேதிகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றிய விளக்க ஆர்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியூசி த.தண்டபாணி, தொ.மு.ச மகேந்திரன், சிஐடியு துரைசாமி, ஐஎன்டியூசி, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொது வேலைநிறுத்தத்தை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, ஐஎன்டியூசி, தொமுச மத்திய சங்கம், சிஐடியு, எச்.எம்.எஸ். உட்பட தொழிற்சங்கத்தினர்100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.