Begin typing your search above and press return to search.
நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
செந்துறையில், நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் செந்துறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்கள் செல்லம்மாள், பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். தொகுதித் தலைவர் மைக்கேல், ஒன்றியத் தலைவர் கஞ்சமலை, ஒன்றியச் செயலாளர் முத்து, தொகுதி பொருளாளர் பாரி வள்ளல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.