அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கை அறிவிப்பு
கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
HIGHLIGHTS
அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் என்.நாகராஜன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்,
அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2021-2022 ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு 24.08.2021 முதல் 15.09.2021 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றது. கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஆண்களுக்கு 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பக் கட்டணம் ரூ.50/- Debit card/ Credit card/ Net banking வாயிலாக செலுத்த வேண்டும். தகுதியான மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் மேற்கண்ட நிலைய முதல்வர்களை நேரில் அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 9499055877, 04329-228408 என்ற தொலைபேசி வாயிலாகவும், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு 9499055879 என்ற தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் என்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.