Begin typing your search above and press return to search.
மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்
வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
HIGHLIGHTS
செந்துறை அடுத்த வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (எ) தியாகராஜன்(45). இவர் கடந்த 25 ம் தேதி ஆடுகளை மேய்த்துகொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அதேயிடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், தியாகராஜன் வீட்டுக்கு நேற்று சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10,000 நிவாரணம் வழங்கினார்.