Begin typing your search above and press return to search.
அரியலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டத்தில், இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்தும், மத்திய பல்கலைக் கழகங்களின் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூரில், அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் அருணன், திருமானூரில் ஒன்றியச் செயலாளர் புனிதன், தா.பழூரில் ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயங்கொண்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் இளவரசன், மீன்சுருட்டியில் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.