Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம் துவக்கி வைப்பு
அரியலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) தொடர்பான "நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு இயக்கம் ஆகஸ்ட் 20, 2022 முதல் அக்டோபர் 02, 2022 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஆகஸ்ட் 20, 2022 முதல் செப்டம்பர் 02, 2022 வரை பொது இடங்கள் மற்றும் நிறுவனங்களில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற உள்ளன.
இச்சிறப்பு இயக்கத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 20, 2022 அன்று திருமானூர் வட்டாரம் மஞ்சமேடு கிராம ஊராட்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தூய்மைப் பணிகள் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
செப்டம்பர் 02, 2022 ஆம் தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளன. இச்சிறப்பு இயக்கத்தில் பொதுமக்களும், தன்னார்வலர்களும் கலந்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.