Begin typing your search above and press return to search.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவு.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 299 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் 09 சங்கங்களுக்கு தலா ரூ.10000/- வீதம் ரூ.90000/- மதிப்பில் உதவித்தொகைக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.