/* */

ஜெயங்கொண்டத்தில் சுவர் இடிந்து விழுந்து பாட்டி, பேரன் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே, மின்னல் தாக்கி, வீட்டில் தூங்கி கொண்டிருந்த பாட்டி, பேரன் உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் சுவர் இடிந்து விழுந்து பாட்டி,  பேரன் உயிரிழப்பு
X

சேதமடைந்த வீடு.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், தேவாங்க முதலியார் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் மற்றும்‌ ஆறுமுகம். இவர்களின் வீடு அடுத்துடுத்து உள்ளது‌. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இரவில் ஜெயங்கொண்டத்தில் மழை பெய்தது.

இந்நிலையில், மாடி வீட்டில் வசிக்கும் சுப்ரமணி வீட்டின் தண்ணீர் தொட்டியில், மின்னல் தாக்கி, சுவர் இடிந்து ஆறுமுகம் ஓட்டு வீட்டின் மேலே விழுந்தது.

பலியான லட்சுமி மற்றும் பேரன் அஜித்குமார்.

இதில், ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தின் அம்மா லட்சுமி (85), மூன்றாவது மகன் அஜித் குமார்( 25) ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் விழுந்ததால் அக்கம் பக்கத்து வீட்டினர் ஓடி வந்து பார்த்த போது, சம்பவம் குறித்து தெரியவந்தது.

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில், உயிரிழந்த அஜித்குமார் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இன்னும் 20 நாட்களில் திருமணம் ஆக இருந்த நிலையில், அவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 1 Nov 2021 7:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி