/* */

வி.கைகாட்டி அருகே பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது

காவல் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான பெண் காவலர்கள், மோசடி செய்த மருதாம்பாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

HIGHLIGHTS

வி.கைகாட்டி அருகே பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது
X

மருதாம்பாள்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, செல்வமுத்துகுமரன் மனைவி மருதாம்பாள் (37), அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம் நன்றாக பேசி பழகி வந்துள்ளார். நிலம் வாங்குவதற்கு உடனடியாக பணம் வேண்டும்; வங்கி மற்றும் சுய உதவிக்குழுவில் கடனாகப் பணம் பெற்று தரும்படியும், நகைகளை அடகு வைத்து கடனாகப் பணம் தரும்படியும் வற்புறுத்தி, அப்பகுதி மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு திருப்பித் தராமல் சில வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரிடம் 1,53,000 ரூபாய் கடனாக பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். மேற்கொண்டு சத்யா அளித்த புகாரின் அடிப்படையில் கயர்லாபாத் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்ததில் இவர் அப்பகுதி மக்களிடையே பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்தது. காவல் ஆய்வாளர் ரவிகுமார் தலைமையிலான பெண் காவலர்கள், மருதாம்பாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனைத் தொடர்ந்து மருதாம்பாளை காவல்துறையினர் திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 April 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!