/* */

அரியலூர் மாவட்டத்தில் 22,100 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் 22,100 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில்  22,100 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  12-14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் முதல் தவணையாக 6,52,284 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 5,89,504 நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 6,295 நபர்களுக்கும் இதுவரை கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 12-14 வயதிற்குட்பட்ட 22,100 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளிகள், 15 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் பயிலும் 7,8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் (Corbe vax) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக இன்று 25 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேலும், இன்று முதல் பள்ளிகள் மற்றும் 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12-14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும்.

மேலும், கோவின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். எனவே, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் 12-14 வயதிற்குட்பட்ட சிறார்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அரியலூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, பொது சுகாதாரத்துணை இயக்குநர் கீதாராணி, நகராட்சி ஆணையர் த.சித்ராசோனியா, நகர் மன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, பரமேஸ்வரன், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 17 March 2022 6:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?