/* */

அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர் வெளியீடு

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்டகலெக்டர் அனைத்துகட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்:  மாவட்ட ஆட்சியர் வெளியீடு
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று வெளியிட்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (01.11.2021) வெளியிட்டார்.

இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்திலுள்ள 149. அரியலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 150.ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 01.11.2021 வெளியிடப்படுகிறது.

149. அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 130872 ஆண் வாக்காளர்களும், 132554 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் மொத்தம் 263433 வாக்காளர்கள் உள்ளனர். 150.ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 130380 ஆண் வாக்காளர்களும், 133742 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் மொத்தம் 264125 வாக்காளர்கள் என மொத்த வாக்காளர்கள் 527558 உள்ளனர்.

மேலும், 01.01.2022 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களைஅந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 01.11.2021 முதல் 30.11.2021 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பப் படிவங்களானது (படிவம்-6, 6யு, 7, 8 மற்றும் 8யு) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 13.11.2021 (சனிக்கிழமை), 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை), 27.11.2021 (சனிக்கிழமை), 28.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.பூங்கோதை, கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 Nov 2021 6:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...