Begin typing your search above and press return to search.
அரியலூர் மாவட்டம் முழுவதும் சாரல்மழை: சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி!
அரியலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் கோடைப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட பலப்பகுதிகளில் இன்று மதியம் காற்றுடன் கூடிய சாரல்மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியாக சீதோஷன நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மானாவாரி கோடைப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மிகவும் பயன்அளிக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.