/* */

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மாணவ, மாணவியர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு.

HIGHLIGHTS

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் சேர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
X

கலெக்டர் ரமண சரஸ்வதி 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்:

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 01 கல்லூரி மாணவர் விடுதியும், 01 ஐடிஐ மாணவர் விடுதியும், 13 பள்ளி மாணவர் விடுதிகளும், 07 பள்ளி மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் மேற்படி விடுதிகளில் சேர்ந்து பயனடையலாம். விடுதியில் சேர மாணவ, மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கு இது பொருந்தாது.

மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் வழங்கப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டிற்கு விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பப படிவங்கள் விடுதி காப்பாளர், காப்பாளனியிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் மாணவ, மாணவியர்களின் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினையும் இணைந்து அந்தந்த காப்பாளர், காப்பாளினி வசம் பள்ளி விடுதிகள் மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு 14.12.2021-க்குள் ஒப்படைத்து மாணவ, மாணவியர்கள் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...