/* */

அரியலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பறிமுதல்

அரியலூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பணம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட  ரூ.1.05 லட்சம் பறிமுதல்
X
அரியலூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தேர்தல் அலுவலர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கோக்குடி கிராமத்தை சேர்ந்த சவுரிராஜன்(45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.05 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அதனை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Updated On: 15 Feb 2022 1:34 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு