/* */

அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து

அண்ணா நினைவு நாள் சமபந்தி விருந்து
X

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அனைத்து மக்களும் சமம் என்ற அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சமபந்தி விருந்து வருடந்தோறும் கோவில்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அண்ணாவின் நினைவு நாளான இன்று அரியலூர் நகரில் உள்ள ஆலந்துறையார் ஸ்ரீ கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் சமபந்தி நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவளித்தார். கொரோனா பேரிடர் காலத்தில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, அனைத்து நபர்களுக்கும் உணவு பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிசந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...