/* */

திருமணத்தில் 10 பொருத்தம் பாருங்க..! சொத்து சுகத்தோட வாழுங்க..!

Srirangam Thirumana Porutham-திருமணத்துக்கு ஜாதகப்பொருத்தம் அவசியமா..? அவைகள் என்னென்ன விவரிக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

HIGHLIGHTS

Srirangam Thirumana Porutham
X

Srirangam Thirumana Porutham

Srirangam Thirumana Porutham

திருமண பொருத்தம் கணிப்பது நட்சத்திர பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜாதகத்தில் திருமணத்திற்கான 10 பொருத்தங்களை நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

பொதுவாகவே தமிழர்கள் மட்டுமன்றி இந்துக்களில் திருமண பொருத்தத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். திருமணத்தை பொறுத்தவரை ஒரு ஆண் மற்றும் பெண்ணை ஒன்றிணைப்பது மட்டும் திருமணம் அல்ல. அந்த திருமணத்தால் இரண்டு குடும்பங்கள் ஒன்றிணைவதை, ஒரு புது சொந்தம் உருவாவதை உறுதிப்படுத்துகிறது. அந்த சொந்தம் நீடித்து புதிய தலைமுறைகளை உருவாக்கவேண்டும். அதற்கு ஜோதிடம் சரியான கணிப்பை வழங்குகிறது.

இந்த செயல்முறையின் முதல் படி, ஜோடியின் இணக்கத்தன்மையை சரிபார்க்க வேண்டும். இது திருமண பொருத்தம் அல்லது வெறுமனே பொருத்தம் என்று அழைக்கப்படுகிறது. திருமணம் என்றதும் முதல்வேலை திருமணப் பொருத்தம் பார்ப்பதுதான். ஜோதிட சாஸ்திரத்தின்படி தமிழில் திருமணப் பொருத்தம் என்பது ஆண் மற்றும் பெண்ணின் பிறந்த நட்சத்திரம் (ஜென்ம நட்சத்திரம்) மற்றும் ஜென்ம ராசியை ஒப்பிட்டு பார்க்கப்படுவதாகும். அவர்களின் பொருத்தத்தின் அளவைக் கண்டறிந்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் திருமண பொருத்தம் பார்ப்பதற்கு ஜாதகப் பொருத்தம் மிகவும் அவசியமானதாகும். திருமண பொருத்தத்தில் 10பொருத்தங்கள் உள்ளன. பொருத்தங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவற்றின் பொருந்தக்கூடிய தன்மை சிறந்தது.

பொருத்தத்தை அதன் நிலைகளின் அடிப்படையில் உத்தமம், மத்யம் மற்றும் அதமம் என கூறப்படுகின்றன. பொருத்தத்தில் உத்தமம் என்பதுதான் சரியான பொருத்தம் என்பதாகும்.

இனி 10 திருமணப் பொருத்தங்களைப் பார்ப்போம்.

திருமணப் பொருத்தம்

தினப் பொருத்தம்:

ஒவ்வொரு நாளும் திருநாளாக அமைய வேண்டுமெனில், கணவன் மனைவி இருவருக்கும் இந்த தினப்பொருத்தம் இருக்க வேண்டும், வேற்றுமைகள் இன்றி தின சண்டைகள் வராமல் காப்பது இந்த பொருத்தமே. இந்த பொருத்தத்தை கணக்கிடும் முறை :

1. பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து, ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வருவதை, ஒன்பதால் வகுக்கும் பொழுது ஈவு 2, 4, 6, 8, 9 என வந்தால் இந்த பொருத்தும் இருவருக்கும் உண்டு

2. பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வந்தால் தின பொருத்தும் உண்டு,

3. இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தால் இந்த பொருத்தும் உண்டு, ஒரே ராசி மற்றும் நட்சத்திரங்களின் பாதங்கள் வேறாக இருந்தாலும் இந்த பொருத்தும் உண்டு.

பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் தின பொருத்தம் இல்லை,

மேலும் இவர்களுக்கு திருமணம் செய்வதை தவிர்க்கவும். இந்த பொருத்தம் இல்லையெனில் கணப் பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


கணப் பொருத்தம்:

ஜோதிட சாஸ்திரத்தில் திருமண பொருத்ததில் மூன்று வகையான கணங்கள் உள்ளன, அவை தேவ கணம், மனித கணம், ராட்சஸ கணம். அனைத்து நட்சத்திரங்களும் இந்த மூன்று கணங்களுக்குள் ஒன்றாக தான் இருக்கும், ஒருவர் மீது ஒருவர் சகிப்பு தன்மை கொள்ளவே இந்த பொருத்தும் உள்ளது. இந்த பொருத்தம் இருப்பின் மற்றவரை சகித்து கொண்டு வாழலாம். ஆக தினச் சண்டை, பிரச்னைகள் வராது. கணம் என்பதை குணம் என்று எடுத்து கொள்ளுங்கள்.

1. அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகியவை தேவ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்

2. பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை மனித கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்.

3. கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை ராட்சஸ கணம் கொண்ட நட்சத்திரங்கள் ஆகும்

ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணத்தை சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்யலாம். அல்லது ஒருவர் தேவ கணம் மற்றொருவர் மனித கணம் என்றால் மணம் செய்யலாம்.

மணமகன் தேவ கணமாக இருந்து பெண் ராட்சஸ கணமாக இருந்தால் இந்த பொருத்தும் அவர்களுக்கு இல்லை. ஆனால் பெண் தேவ கணமாக இருந்து, ஆண் ராட்சஸ கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. பெண்ணுக்கு ராட்சஸ கணமாக இருந்து ஆணின் நட்சத்திரம் 14 நட்சத்திரத்திற்கு பிறகு இருந்தாலும் பொருத்தம் உண்டு. இந்த பொருத்தம் இருந்தால் தான் இருவருக்கும் மண ஒற்றுமை ஏற்படும். இந்த பொருத்தம் இல்லாதவர்களுக்கு தின பொருத்தம் அவசியம் இருக்க வேண்டும்.

மகேந்திர பொருத்தம்:

மகேந்திர பொருத்தம் என்பது புத்திர பாக்யத்தை நிலைக்க செய்வது ஆகும். இந்த பொருத்தம் மகப்பேறு அதாவது சந்ததி விருத்தியை உறுதி செய்வது, மகேந்திர பொருத்தம் இல்லாவிடில் நாடி பொருத்தம் பார்க்கப்படும். அல்லது மர பொருத்தம் பார்க்கப்படும். ஜாதக கட்டத்தில் ஐந்தாம் வீடு, புத்திரகாரகர் குருபகவான் சிறப்பாக இருந்தால் பிரச்சனை இல்லை.

பெண் நட்சத்திரம் முதல், ஆண் நட்சத்திரம் முடிய கூட்டி வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமைந்தால், மகேந்திரப் பொருத்தம் உள்ளது எனலாம். இந்த பொருத்தம் சிறப்பாக இருந்தால் தான் புத்திர பாக்யமும், புத்திரர்களால் செல்வமும், வளமும் உண்டாகும்.

ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும் போது 13 க்கு மேல் இருந்தால் சுபம். 13க்குக் கீழிருந்தால் பொருந்தாது என்றும் இருந்தது. ஆனால் தற்போது அந்த கூட்டல் ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கூறுகின்றனர். எனவே, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம்.

இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும். இது பெண்ணின் ஆயுளுக்கு மிகவும் தேவையான பொருத்தமாகும்.

ஸ்திரி என்றால் பெண் என்று பொருள்

தீர்க்கம் - என்றால் முழுமை என்று பொருள்

அதாவது பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய முழுமையான அனைத்தும் கிடைக்குமா? என்பதை அறியும் பொருத்தமாகும். இது பெண்களுக்கு மிகவும் முக்கியமான பொருத்தமாகும்.

யோனி பொருத்தம்:

ஒவ்வொரு நட்சத்திரமும் ஒரு மிருகமாக கொள்ளபடுகிறது. அதன் படி இந்த பொருத்தம் கணக்கிடப்படுகிறது. பகைமையல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு. பகைமையான மிருகங்கள் என்றால் யோனி பொருத்தம் இல்லை.

பகமையான மிருகங்கள் வந்தால் பொருத்தம் இல்லை. இல்லற சுகத்தை அடிப்படையாக கொண்ட இந்த பொருத்தம் இருந்தால் வாழ்க்கை என்றும் திகட்டாத இனிப்பாக இருக்கும். இந்த பொருத்தம் ஆண், பெண் இருவரின் தாம்பத்திய உடல் அமைப்பை பற்றியது. இந்த பொருத்தம் இருந்தால் இல்லறம் என்னும் தாம்பத்யம், உடல் உறவு போன்ற சிற்றின்பங்கள் சிறப்பாக இருக்கும். இந்த பொருத்தம் இல்லையென்றால் தாம்பத்யம் இனிக்காது என்றும் கூறுவர்.

அசுவினி - ஆண் குதிரை

பரணி - ஆண் யானை

கார்த்திகை - பெண் ஆடு

ரோகிணி - ஆண் நாகம்

மிருகசீரிஷம் - பெண் சாரை

திருவாதிரை - ஆண் நாய்

புனர்பூசம் - பெண் யானை

பூசம் - ஆண் ஆடு

ஆயில்யம் - ஆண் பூனை

மகம் - ஆண் எலி

பூரம் - பெண் எலி

உத்தரம் - எருது

அஸ்தம் - பெண் எருமை

சித்திரை - ஆண் புலி

சுவாதி - ஆண் எருமை

விசாகம் - பெண் புலி

அனுஷம் - பெண் மான்

கேட்டை - கலைமான்

மூலம் - பெண் நாய்

பூராடம் - ஆண் குரங்கு

உத்திராடம் - மலட்டு பசு

திருவோணம் - பெண் குரங்கு

அவிட்டம் - பெண் சிங்கம்

சதயம் - பெண் குதிரை

பூரட்டாதி - ஆண் சிங்கம்

உத்திரட்டாதி - பாற்பசு

ரேவதி - பெண் யானை

இவற்றில், பொருத்தம் இல்லாதவை

பாம்பு x கீரி

யானை x சிங்கம்

குரங்கு x ஆடு

மான் x நாய்

எலி x பூனை

குதிரை x எருமை

பசு x புலி

மேலே உள்ளது படி இருந்தால், பொருத்தம் இல்லை. இந்த பொருத்தம் சரியாக இல்லையென்றால் இன்பங்கள் குறைவு தான்..

ராசி பொருத்தம்:


ராசி பொருத்தம் என்பதும் வம்ச விருத்தியை வழிவகை செய்யும் பொருத்தங்களில் (மகேந்திர - நாடி) ஒன்று. இந்த பொருத்தம் இருந்தால் அனைத்து வளங்களும் குறிப்பாக ஆண் வாரிசு பிறக்கும் என்று சில சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது. இந்த பொருத்தம் இருப்பின் வம்சம் தலைக்கும்.

கணவனுக்கு மனைவியும், மனைவி குடும்பத்தாரும், மனைவிக்கு கணவனும், கணவன் குடும்பத்தாரும் செய்யும் காரியங்கள் ராசியாக அமைய இந்த ராசி பொருத்தம் தேவை. இது சரியாக இல்லையென்றால் இருவரின் செயல்களும், எண்ணங்களும் வேறாக இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் பஞ்சபூத தத்துவங்கள், தன்மைகள் உண்டு. உதாரணமாக நீரும் நெருப்பும் சேராது. அது போல ஆண் மற்றும் பெண் இருவரின் தன்மைகள் ஒன்றாக இருக்க வேண்டும்...

பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால்

6-க்கு மேலிருந்தால் பொருந்தும்.

8-வது ராசி பொருந்தாது.

7-வது ராசியானால் சுபம்.

அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது.

1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் மத்திமம்.

இந்த பொருத்தம் இல்லை என்றால் ராசியாதிபதி பொருத்தமாவது அவசியம் இருக்க வேண்டும்

ராசி அதிபதி பொருத்தம்:

ஒவ்வொரு ராசிக்கும், ராசியதிபதி உண்டு. ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே அதிபதி என்றால் பொருத்தம் உண்டு. அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தாலும் பொருத்தம் உண்டு. பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.சம்மந்திகள் ஒற்றுமை வேண்டுமெனில் இந்த பொருத்தம் அவசியம்.

உதாரணமாக சூரியனுக்கு சந்திரன், செவ்வாய், குரு நட்பு கிரகங்கள், புதன் சமமான கிரகம்.. சுக்கிரன், சனி, ராகு, கேது பகை கிரகங்கள். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுக்கும் முடிவுகளில் பலன் கிடைக்க இந்த பொருத்தம் தேவை.

வசிய பொருத்தம்:

வசிய பொருத்தம் என்பது, கணவன் மனைவி இருவருக்கும், வசியத்தை ஏற்படுத்தி வாழ்நாள் முழுதும் பூரண அன்புடன், ஒருவரைஒருவர் விட்டு கொடுக்காமல் இனிமையாக வாழ்வதற்கு உதவும். பொதுவாக ஒரே நபரை தொடர்ந்து சந்தித்து வர சலிப்பு ஏற்படும். அந்த சலிப்பு வராமல் நாள்தோறும் சந்தோசம் நிலைக்க இந்த பொருத்தம் அவசியம் தேவை.

வசிய பொருத்தம் உள்ள தம்பதிகள் வாழ்க்கை முழுவதும் அன்புடனும், நிம்மதியுடனும் வாழ்வார்கள். அலட்சியம், மந்தம், சலிப்பு ஆகியவை இருவருக்கும் இடையே ஏற்படாது.

ஒவ்வொரு ராசிக்கும் அதற்கு ஏற்ற வசியம் உள்ள ராசியுடன் மட்டும் தான் பொருந்தும்.

பெண்ணின் ராசி எந்த ஆணின் ராசியுடன் பொருந்தும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது, மற்ற ராசிகள் பொருந்தாது.

மேஷத்திற்கு – சிம்மம், விருச்சிகம்

ரிஷபத்திற்கு – கடகம், துலாம்

மிதுனத்திற்கு – கன்னி

கடகத்திற்கு – விருச்சிகம், தனுசு

சிம்மத்திற்கு – துலாம் மீனம்

கன்னிக்கு – ரிஷபம், மீனம்

துலாமிற்கு – மகரம்

விருச்சகதிற்கு – கடகம், கன்னி

தனுசுவிற்கு – மீனம்

மகரத்திற்கு – மேஷம், கும்பம்

கும்பத்திற்கு – மீனம்

மீனத்திற்கு – மகரம்

ரஜ்ஜு பொருத்தம்:

ரஜ்ஜு பொருத்தம் என்பதே பத்து திருமண பொருத்ததில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர். ரஜ்ஜு என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை

சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்:

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.

கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை – அவரோஹனம் கொண்டவை

உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்:

கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை

ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை

பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்:

அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.

ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்.

thirumana porutham

ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும். ஆனால் தலை ரஜ்ஜு – சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை.

செவ்வாயின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது.

இதில்

சிரசு ரஜ்ஜு என்றால் - உயிர் போகும் நிலை

கண்ட ரஜ்ஜு என்றால் – பெண்ணுக்கு பாதிப்பு

வயிறு ரஜ்ஜு என்றால் – குழந்தை பாக்கியம் கிடைக்காது

தொடை ரஜ்ஜு என்றால் – செல்வம் நிலைக்காது. ஏழ்மை நிலை

பாத ரஜ்ஜு என்றால் – பிரிவு, ஆன்மீக பயணம் – சன்னியாசம் செல்லுதல்

வேதை பொருத்தம்:

வேதை பொருத்தம் என்பது, மாங்கல்ய கயிறின் பலத்தை குறிப்பது, வேதை பொருத்தம் என்பதும் தற்போது பார்க்கப்படும் அடிப்படை பொருத்தங்களில் ஒன்று, ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் விதையாக வந்தால் பொருத்தம் இல்லை என்று கொள்ளவும், மற்றவை பொருத்தமானவை.

அசுவினி - கேட்டை

பரணி - அனுஷம்

கார்த்திகை - விசாகம்

ரோகிணி - சுவாதி

திருவாதிரை - திருவோணம்

புனர் பூசம் - உத்ராடம்

பூசம் - பூராடம்

ஆயில்யம் - மூலம்

மகம் - ரேவதி

பூரம் - உத்ரட்டாதி

உத்திரம் - உத்ரட்டாதி

அஸ்தம் – சதயம்

மேலே உள்ளவை ஒன்றுகொன்று பொருந்தாதவை, இந்த நட்சத்திர இணைவு அதமம்.

மேலும் செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை உள்ளதால் இவைகளும் பொருந்தாது. இவர்கள் அவர்களுக்குள் திருமணம் செய்யக்கூடாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 March 2024 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  2. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  6. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  7. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  9. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  10. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!