/* */

சபரிமலைக்கு தனி போஸ்டல் பின்கோடு வழங்கிய தபால் துறை

சபரிமலைக்கு தனி போஸ்டல் பின்கோடு வழங்கி உள்ளது தபால் துறை.

HIGHLIGHTS

சபரிமலைக்கு தனி போஸ்டல் பின்கோடு வழங்கிய தபால் துறை
X
சபரிமலை.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் அதிகப்படியான பக்தர்கள் விரதம் இருந்து தரிசிக்க வருகின்றனர்.

தமிழகம் மற்றும் கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பக்தர்கள் கார்த்திகை மாதம் விரதத்தை தொடங்கி மண்டல பூஜையின் போது மகரஜோதி காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதேபோல் 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளும், 50 வயதுக்கு மேலே உள்ள பெண்களும் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெண்கள் யாரும் வழிபட செல்லவில்லை.

இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு சபரிமலையில் 10 வயதிற்கு கீழே உள்ள பெண் குழந்தைகளும் 50 வயதுக்கு மேலே உள்ள பெண்களும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடியும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய இயலாதவர்கள் சபரிமலை கோவிலுக்கு வேண்டுதலுக்காக கடிதம் எழுதுவது வழக்கம். இதற்காக இங்கு போஸ்ட் ஆபீஸ் ஒன்று உள்ளது. அதற்கு தனியாக போஸ்டல் பின்கோடு அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய தபால் துறை.

சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் அருகே சபரிமலை போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் மட்டுமே இது செயல்படும். இதற்கு பக்தர்கள் அனுப்பும் கடிதங்கள் பெரும்பாலும் வேண்டுதல் தொடர்பாக இருக்கும்.

சிலர் தங்கள் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டி எழுதுவர். சிலர் தங்கள் பிள்ளைகளின் திருமண அழைப்பிதழை அனுப்புவர். இதுபோல காணிக்கையை மணியார்டர் ஆக அனுப்புவர். இவற்றை அய்யப்பன் முன் வைத்து விட்டு நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவர். கடந்த 1963ல் இங்கு போஸ்ட் ஆபீஸ் செயல்பட துவங்கியது.

இதைத் தொடர்ந்து அய்யப்பன் படம் மற்றும் 18 படிகளுடன் கூடிய முத்திரை அறிமுகமானது. இந்த முத்திரை பதித்த கடிதம் தங்கள் வீடுகளுக்கு வருவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுகின்றனர். சபரிமலைக்கு 689713 என்ற பின்கோடும் உண்டு. நம் நாட்டில் சபரிமலை அய்யப்பனுக்கும் ஜனாதிபதிக்கும் மட்டுமே தனி பின்கோடு உள்ளது.

இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் பக்தர் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 22 Nov 2022 9:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது