/* */

தமிழ் வருடப் பிறப்பு: குரோதி ஆண்டில் அனைத்து ராசிக்குமான பலன்

குரோதி தமிழ் புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்

HIGHLIGHTS

தமிழ் வருடப் பிறப்பு: குரோதி ஆண்டில் அனைத்து ராசிக்குமான பலன்
X

நிகழவிருக்கும் மங்களகரமான குரோதி வருடம் தமிழ் புத்தாண்டு அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறக்கப்போகிறது. இந்த குரோதி ஆண்டில் கிரகங்களின் மாற்றங்களின் மாற்றம் ஏறப்படப்போகிறது. அதன்படி மே 1ஆம் தேதி சித்திரை மாதம் 18 குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதேபோல் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அதிசார சனியால் குரோதி ஆண்டின் இறுதியில் ராகு சனி சேர்க்கை ஏற்படப்போகிறது.

குரோதி வருஷத்தின் நவநாயகர்கள்:

  • ராஜா - செவ்வாய்
  • மந்திரி - சனி
  • அர்க்காதிபதி - சனி
  • மேகாதிபதி - சனி
  • ஸஸ்யாதிபதி - செவ்வாய்
  • சேனாதிபதி - சனி
  • இரஸாதிபதி - குரு
  • தான்யாதிபதி - சந்திரன்
  • நீரஸாதிபதி - செவ்வாய்
  • பசுநாயகர் - கோபாலன்

குரோதி வருஷ வெண்பா:

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்

பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க

அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே

சொற்பவிளையுண்டெனவே சொல்

பாடல் விளக்கம்: குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் என்று வெண்பாவில் சொல்லப்பட்டுள்ளது.

பொது பலன்கள்: இந்த குரோதி ஆண்டை பொருத்தவரை மிதமான மழையும் - மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு 9 புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு ஏரி குளம், குட்டை, கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும்.

இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் எரிவாயு தங்கம் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும். ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று வெள்ள பாதிப்பு ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும்.

மேக அதிபதியாக சனி ஆட்சியாக இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக செவ்வாய் இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கம் ஏற்படும். அமாவாசை பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.


ராஜா செவ்வாய் பலன்: கல்வி நவீன படுத்தப்படும் சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும் பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்

மந்திரி சனி பலன்: இந்த ஆண்டு மந்திரியாக சனி பகவான் வருவதால் நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் பெட்ரோலிய பொருட்கள் பெயிண்ட் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை விலை சற்று உயரும்

ஆண்டின் அதிபதி சனி பலன்: இந்த ஆண்டு அதிபதியாக சனி பகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும்

மேக அதிபதி சனி பலன்: இந்த ஆண்டு மேக அதிபதியாக சனிபகவான் வருவதால் நெல் கோதுமை தானியங்கள் சோளம் நவ தானியங்கள் நன்கு விளையும்

ஸஸ்யாதிபதி செவ்வாய் பகவான் பலன்: இந்த ஆண்டு ஸஸ்யாதிபதியாக செவ்வாய் பகவான் இருப்பதால் மங்கள காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும்

சேனாதிபதி சனி பலன்: சனி பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும்

ரஸாதிபதி குரு பகவான் பலன்: துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் - கசப்புச் சுவையுள்ள பொருட்கள் மருத்துவ குணமுள்ள பொருட்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும்

தான்யாதிபதி சந்திரன் பகவான் பலன்: இந்த ஆண்டு கம்பு கேழ்வரகு சோளம் சிறு தானியங்கள் அதிகமாக விளையும் அதற்கேற்றார் போல் மழையும் இருக்கும்

நீரஸாதிபதி செவ்வாய் பகவான் பலன்: இந்த ஆண்டு மஞ்சள் குங்குமப்பூ வாசனை கஸ்தூரி சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும் விலை சற்று ஏறும்

சித்திரை மாதப் பிறப்பின் பலன்:

இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும் பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள் பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்

மகர சங்கராந்தி பலன்: இந்த ஆண்டு செவ்வாய்கிழமை பிறப்பதால் நல்ல மழை பெய்யும் மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்

இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம். இந்த ஆண்டு ராஜாவாக செவ்வாய் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும்.

மந்திரியாக சனி வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும். கார் லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சனி வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.


இந்நிலையில் இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு யோகம் உங்களைத் தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிரிகள் தொல்லை ஒரேடியாக நீங்கும். சொந்த வீடு, நிலம் வாங்கலாம். வெளிநாட்டு வேலைக்காக முயற்சி சாதகமாக அமையும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ரிஷபம்: குரோதி தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். ஆலய தரிசனம் செய்வீர்கள். ஆன்மீக பயணங்களால் ஆதாயம் உண்டாகும், வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது. வேலையை இழந்தவர்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தடைபட்ட சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறப்போகிறது. தொழிலாளி முதலாளி ஆகலாம். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும் கணவன், மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.

கடகம்: குரோதி தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். வரவேண்டிய பணம் தக்க நேரத்தில் வந்து சேரும். கடன் தொல்லை ஒரேடியாக முடிவடையும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மாணவர்களுக்கு விரும்பும் உயர்கல்வி தேடி வரும். தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்யும் பணம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது.

சிம்மம்: குரோதி தமிழ் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சொத்து, வண்டி வாகனம் வாங்கலாம். புதிய பதவிகள் தேடி வரும். சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. கடன் தொல்லை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் குரோதி ஆண்டில் ஒன்று சேருவார்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரோதி தமிழ் புத்தாண்டு பயண யோகத்தை தரும். தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்த குரோதி தமிழ் புத்தாண்டில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும்.கணவன் மனைவி உறவு பலப்படும்.

விருச்சிகம்: குரோதி தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.

தனுசு: குரோதி தமிழ் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாள் நோயிலிருந்து விடுப்படுபவார்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்: குரோதி தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு வெற்றிகரமான முடிவுகள் கிடைக்கும். திருமணம் கைகூடி வரும்.

கும்பம்: குரோதி தமிழ் புத்தாண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு வேலையில் இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீக பயணம் செல்வீர்கள். இந்த ஆண்டு நீங்கள் நலத்தையும் வளத்தையும் பெறுவீர்கள்.

மீனம்: குரோதி தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு தைரியத்தை தரும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் இப்போது நிறைவேறும். இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை நேடிவ் நியூஸ் தளத்தின் கருத்துகள் அல்ல.

Updated On: 13 April 2024 3:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...