/* */

நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!

சிவம் என்றால் அன்பு. கடவுள் சிவனை சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கின்றனர். பரம்பொருளாக விளங்கும் சிவன் எங்கும் நிறைந்து இருக்கிறார்.

HIGHLIGHTS

நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
X

Lord Shiva Motivational Quotes in Tamil

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினார். பின்னர் இருவரும் சேர்ந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார். தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார்.

Lord Shiva Motivational Quotes in Tamil

சிவன் என்றால், தமிழில் சிவந்தவன். வடமொழியில் சிவம் என்றானது. யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும் அழைக்கின்றனர். அஷ்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் இவரைச் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்துப் பேய்களுடன் ஆடுபவராகச் சித்தரிக்கப்படுவதால் பித்தன் என்று குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்.

சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர். மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளய காலத்தில் அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்துச் சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

கயிலையில் பார்வதி தேவி ஒரு குழந்தையைத் தோற்றுவிக்கிறார். சிவபெருமானை அறியாத அக்குழந்தை அவருடன் சண்டையிட்டு தலையை இழக்கிறது. பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று யானை முகம் பொருத்தி அம்மகனை மீட்பதாக இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

Lord Shiva Motivational Quotes in Tamil

சூரன் என்ற அரக்கனை அழிக்கச் சிவபெருமான் தனது ஆறுமுகங்களிலுள்ள நெற்றிக் கண்களிலிருந்து நெருப்புப்பொறியை உருவாக்கினார். அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் வாயு பகவான் சரவணப்பொய்கை எனும் ஆற்றில் விட்டார்.

அந்த நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் வந்து வந்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி அரவணைத்த பொழுது ஆறு முகங்களைக் கொண்ட முருகனாக அக்குழந்தை மாறியது என்று இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

அன்பாக அருட்பெருஞ்ஜோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்தப் பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் அமைத்து வழிபட்ட பெருமை நமது புண்ணிய பூமிக்கு உண்டு.

சிவ வழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. வேதங்களில் சிவபெருமான் ருத்ரன் என்று அழைக்கப்படுகிறார். ருத்ரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று அர்த்தம். பசுபதி, பூதபதி பூதநாதர் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

Lord Shiva Motivational Quotes in Tamil

சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார்.

அருவத்திருமேனி சித்தர் என்றும், அருவுருவத்திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது.

தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்தைந்து சிவமூர்த்தங்கள் மகேஸ்வர மூர்த்தங்கள் என அழைக்கப்படுகின்றன.

சிவன் பற்றிய மேற்கோள்கள்

அகத்தினில் அமைதி இருந்தால், புறத்திலும் அமைதி பிறக்கும்."

Translation: "When there is peace within, peace manifests in the outer world as well."

"சிவனின் அருளே சக்தியின் ஊற்றுக்கண்."

Translation: "Shiva's grace is the source of all strength."

Lord Shiva Motivational Quotes in Tamil

"தடைகளே உன் வளர்ச்சியின் படிகள்."

Translation: "Obstacles are the stepping stones of your growth."

"உள்ளத்தூய்மை உன்னதம் தரும்".

Translation: "Purity of heart brings elevation."

"நடனமாடும் நாதனே உன் இலக்குகளுக்கு வழிகாட்டி."

Translation: "Let the dancing Lord be your guide to your goals."

"தியானத்தின் ஒளியில், விடை காண்பாய்."

Translation: "In the light of meditation, you will find your answers."

"சிவனின் தாளத்தில் உன் துயரம் அகலும்."

Translation: "Your sorrows will dissipate in the rhythm of Shiva."

Lord Shiva Motivational Quotes in Tamil

"அகந்தையை அழி, ஆன்மாவை உயர்த்து."

Translation: "Destroy the ego, elevate the spirit."

"அவன் இசையிலே ஆழ்ந்து போ."

Translation: "Be immersed in His melody."

"தாமரை இலை போல, பற்றற்று இரு."

Translation: "Like the lotus leaf, exist with detachment."

"உள்ளிருக்கும் ஜோதியை வணங்கு. வெளிச்சம் தானே வரும்."

Translation: "Worship the inner light. Illumination will follow."

"சவால்களை சிவனின் சந்நிதியில் சமர்ப்பி."

Translation: "Offer your challenges at the feet of Shiva."

"மூன்றாவது கண் ஞானத்தின் கண். அதைத் திற."

Translation: "The third eye is the eye of wisdom. Open it."

Lord Shiva Motivational Quotes in Tamil

"மௌனமும் ஒரு வழிபாடு தான்.

Translation: "Even silence is a form of worship."

"சரணடைதலில் உண்மையான விடுதலை உள்ளது."

Translation: "In surrender lies true liberation."

"சிவன் உன் உணர்விலும், உன் செயலிலும் தெரிவான்."

Translation: "Shiva is reflected in your consciousness and actions."

"அவன் ஆதியும் அந்தமும்."

Translation: "He is the beginning and the end."

"தீமையை எரிக்கும் நடராஜனின் திருவடியே சரணம்."

Translation: "Seek refuge at the feet of Nataraja, who destroys all evils."

"அவன் பெயரை உச்சரிப்பதே ஒரு விமோசனம்."

Translation: "Even uttering His name offers liberation."

Lord Shiva Motivational Quotes in Tamil

"சிவனை அறிந்தவன், தன்னை அறிந்தவன்."

Translation: "One who knows Shiva knows themselves."

தூக்கி வைப்பதும் அவனே, உனை தூக்கி சுமப்பதும் அவனே…

நம்பிக்கையுடன் ஓடு நிழலாய் அவன் வருவான் உனை காத்திடுவான்.

நெஞ்சில் அவனே, என்றும் சிவனே

நீ செய்யும் தர்மம் நிச்சயம் உன் குலத்தை காக்கும், ஈசன் வாக்கு

மனம் வலிக்கும் போது அதற்கு ஒரே மருந்து, ஓம் நமசிவாய

மனிதர்கள் மீது கொண்ட பந்தம் இந்த ஜென்மத்தோடு முடியட்டும்…

ஈசன் மீது கொண்ட பந்தம் ஈரேழு ஜென்மங்கள் தொடரட்டும்…

Lord Shiva Motivational Quotes in Tamil

நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்…

பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!

நீ உன் வாழ்வில் பிரச்சனைகளை கண்டு ஓடாதே இறைவனோடு சேர்ந்து நில் வெற்றி உனக்கே.!

ஒளியாய் நீ இருப்பதால் இருளைப்பற்றியக் கவலை எனக்கில்லை…

நீ பக்தி செய்வாயானால் எனதருகே நீ வருவாய்,

தொண்டு செய்வாயானால் நான் உன்னருகே வருவேன்..!

முடிவே இல்லாத பாதையில் பயணிக்கிறேன்…

முடிவில் நீ வழி காட்டுவாய் என்ற நம்பிக்கையுடன்…

Lord Shiva Motivational Quotes in Tamil

மனமுருகி வேண்டுவோரின் வேண்டுதல் என்றும் வீணாவதில்லை.

எதையெல்லாம் நீ இழந்தாயோ அதை‌விட அதிகமாக உன்னை வந்து சேரும்…

தலைகீழாக நின்றாலும் தலையில்

எழுதியது நடந்தே தீரும்…

இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுத்தாலும்

தரமானதாக கொடுப்பார் சோர்ந்து போகாதீர்கள்.

எனக்கு ஒளியாய் நீ இருப்பதனால்

நான் இருளை கண்டு பயப்படுவதில்லை

என் அப்பனே…!

Updated On: 17 April 2024 8:01 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  4. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  7. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  8. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  9. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  10. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...