/* */

கொரோனா: பத்திரிகைகள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை -ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா - பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கதொகை,இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

HIGHLIGHTS

கொரோனா:   பத்திரிகைகள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை -ஸ்டாலின் அறிவிப்பு
X

கொரோனா - பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக 5000 ரூபாயும் நோய் தொற்றினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

(கடந்த ஆட்சியில் 3000 ஊக்க தொகை மற்றும் 5 லட்ச ரூபாய் வழங்கப்பட்டதை உயர்த்தி வழங்குகிறார் ஸ்டாலின் (இது அரசு அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது)

பத்திரிக்கைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 5000 ரூபாய் கொரோனா நோய் தொற்றினால் இறப்பு ஏற்படின் இழப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் -

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே ஊடகவியலாளர்கள் பயனுள்ள தகவல்களையும் செய்திகளையும் மக்களுக்கு சரியாக கொண்டு சேர்ப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். மக்களுக்கும் அரசுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இந்த காலகட்டத்தில் சிறப்பாக இயங்கி வரும் இவர்களது பணியினை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (அதாவது அரசு அங்கீகார அட்டை மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை இலவச பேருந்து பயண அட்டை போன்ற ஏதேனும் ஒரு வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இருக்க வேண்டும்) ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை 3000 ரூபாய் ஆகும் இதனை தற்பொழுது உயர்த்தி வழங்க கோரி பெறப்பட்ட கோரிக்கையினை கனிவோடு பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஊடகவியலாளர் ஊக்கத் தொகையினை ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று கடந்த ஆட்சியின்போது பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரியும் அரசு அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் நோய்த்தொற்று காரணமாக இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க அரசாணை வெளியிட்டு இருந்தது.

இதனையும் உயர்த்தி வழங்கக் கோரி ஊடகவியலாளர்கள் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து அதனை 10 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் மேலும் பத்திரிக்கைத்துறை மற்றும் அனைத்து ஊடகத்துறை நண்பர்களும் இந்த நோய்த்தொற்று காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணிகளில் கவனமுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 26 May 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  5. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  7. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  9. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  10. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்