/* */

ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது: முதல்வர் ஸ்டாலின் விளாசல்!

ராஜ்பவனில் இருந்தே தேர்தல் பிரச்சார தொடங்கியதாக ஆளுநரிடம் கூறிவிட்டு வந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது: முதல்வர் ஸ்டாலின் விளாசல்!
X

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசும் முதல்வர் ஸ்டாலின் 

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு தேர்தலையும் சந்திக்கிறது.

இதற்கான தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்கான தனது பரப்புரையை திருச்சியில் தொடங்கி இருக்கிறார். பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

திருச்சி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது, "திருச்சி என்றாலே திருப்பு முனைதான். திமுகவை தொடங்குவது என முடிவெடுத்தது திருச்சியில் தான். திருச்சி பாதை எப்போதும் வெற்றிப்பாதை என்பதற்கு அடையாளமாக 6 முறை மக்கள் வெற்றியை தந்துள்ளனர். பாஜக ஆட்சியை வீழ்த்தி, மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். தேர்தல் நேரத்தில் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். தனது ஆட்சி முடியப்போகிறது என பிரதமர் மோடிக்குத் தான் தூக்கம் வரவில்லை.

10 ஆண்டுகால நாட்டை ஆண்ட பிரதமரால் தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு திட்டம் ஒன்றையாவது சொல்ல முடியுமா? தமிழ்நாட்டுக்கு கொடுத்த திட்டம் என்ன என்று பலமுறை கேள்வி எழுப்பியும் பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை. தோல்வி பயம் பிரதமர் மோடியின் முகத்திலும், கண்ணிலும் தெரிகிறது.

ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுவது கோழைத்தனமானது. ராஜ்பவனில் இருந்தே தேர்தல் பிரச்சார தொடங்கியதாக ஆளுநரிடம் கூறிவிட்டு வந்தேன். பாஜக தமிழர்களை கொச்சைப்படுத்தத் தொடங்கிவிட்டது . தமிழ்தான் மூத்த மொழி என்று பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால், இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றார்.

Updated On: 22 March 2024 2:59 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு