/* */

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா... மகளிர் தின வாழ்த்து வாசகங்கள்...

Womens Day Quotes in Tamil-ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ந்தேதியன்று விமர்சையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கான வாழ்த்துகள் இதோ....

HIGHLIGHTS


Womens Day Quotes in Tamil-அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்றது அந்தக்காலம். அதனை தகர்த்து இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.

இருந்த போதிலும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துகொண்டேதான்இருக்கிறது. இன்றளவிலும் பல குடும்பங்களில் வரதட்சணைக்கொடுமை,குடும்ப பிரச்னைகள் என பல விஷயங்கள் அவர்களுடைய மண வாழ்விற்கு முறிவான காரணங்களாக அமைகின்றன. அதிலும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இக்குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தாலும் பெண்குழந்தைகளுக்கு போதிய சுதந்திரம் இன்னும் நிரந்தரமாக கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் பாலியல் துன்புறுத்தல், வன்புணர்வு சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து வருகிறது. இக்குற்றவாளிகளுக்கும் இனிமேல் அவர்கள் மற்றும் சமூகத்தில் உள்ளவர்கள் யாருமே அந்த குற்றச்செயலினை செய்யாமல்இருக்க வலியுறுத்தி கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும் என மாதர்சங்கங்கள் இன்றளவிலும் வலியுறுத்துகின்றன.

மகளிர் தின வாழ்த்து பரிமாற்றம் அழகு தமிழில் இதோ....

இந்த உலகில் பெண்ணானவள் தாய், தோழி, மகள், மனைவி என அனைத்து உன்னத தலமான உறவுகளாய் நம்முடன் நம் வாழ்நாள் வரைக்கும் இருக்கிறாள் அவர்களைப் போற்றும் விதமாக மார்ச் 8 ஆம் தேதி இந்த சர்வதேச உலக மகளிர் தினத்தை கொண்டாடுகிறோம்.

பல சிக்கல்களைத் தாண்டி பல பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்து உள்ளனர் மற்றும் வெற்றியடைய போராடிக் கொண்டிருக்கும் பெண்களுக்குமார்ச் 8 ந்தேதி உலக மகளிர்தினத்தையொட்டி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கின்றனர்.

சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது.

வாழ்க்கை ஒரு வானவில் ஆக இருந்தால் அதில் நீ ஒரு வர்ணம்! வாழ்க்கை ஒரு இருட்டாக இருந்தால் அதில் நீ வெளிச்சம்! இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.

ஆண்களுக்கு நிகராக வரலாறு படைக்கும் பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

இன்றைய மகளிர் தின நாளின் பெண்ணடிமை ஒழியட்டும் பெண்ணின் முன்னுரிமை இந்த உலகம் உணரட்டும்.

உலக பெண்கள் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் பெண்ணாகப் பிறந்தோம் என்று பெருமை கொள்ளுங்கள்.

உலகத்தை உருவாக்கிய பெண்களே உதிரத்தை உயிராகிய பெண்களே அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

சாதனை உயரத்தை எட்டி உள்ள பெண்களின் சமுதாயத்திற்கு ஒரு நாள் உலகமெங்கும் ஒருங்கே கொண்டாடப்படும் தினம் தான் உலக மகளிர் தினம்.

அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகினை அன்பால் மற்றும் அரிவாளும் அனைத்து பெண்களுக்கும் என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

ஒரு பெண்ணானவள் அன்பில் தாயாவாள் மற்றும் அழகில் தேவதை அவள் மற்றும் அறிவில் அவள் ஒரு மந்திரி.

உடலால் நீங்க ரோஜா! மலர்கள் உள்ளதால் நீங்கள் இரும்புத் திரைகள்!

அழகாய் நீங்கள் அல்லி மலர்கள்! அறிவால் நீங்களா ஆர்ப்பரிக்கும் அலைகள்.

பெண்ணே சுமங்களை தருவது நீயே! சுமைகளை சுமக்குவதும் நீயே! உயிர்களை தருவதும் நீயே! உறவுகளை தருவதும் நீயே!

ஆணின் முதல் தேடல் பெண் தான் ஒரு ஆணின் இறுதி தேடலும் பெண்தான்.

உலகை நகர்த்தும் இயற்கை கடிகாரங்கள் பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

நீ நிஜம் ஆனவள் நீ நிரந்தரமானவன் உன் உதிரத்தில் பூத்த உயிர்களே உலகத்தில் வாழும் மனிதர்கள்.

பெண்ணே உன் கனங்களை மெல்ல உதிரிவிட்டு உந்தன் கனவுகள் துரத்திப் பிடித்துடு.

உன் அறிவை மெல்ல திறந்துவிடு உந்தன் சிறகை விரித்துவிடு பெண்ணே.

சுதந்திரத்தின் வேர்கள் உனக்காய் முளைக்கட்டும், சுயமாக நிற்க உன் கால்கள் கற்கட்டும்.

பெண்ணாய் பிறந்து விட்டோம் என்று கவலை கொள்வதைவிட நாம் பெண்ணாக பிறந்து விட்டோம் என்று இந்த மகளிர் தினத்தில் இருந்து உணர்வோம்.

ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான அன்பான குணமே காரணம்.

பெண்கள் மெழுகுவர்த்தி போன்றவர்கள் உருக்கவும் தெரியும் உருகவும் தெரியும்

இந்த உலகில் நிபந்தனையற்ற பாசத்தையும், அன்பையும், பரப்பும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

வலிமையான, அழகான, அன்பான மற்றும் தனித்துவமான நீ்ங்கள், என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. வாழ்த்துகள்

பெண்கள் இல்லாத உலகில் அன்பு நிலைத்திருப்பதில்லை அன்பு இல்லா உலகில் மனிதன் வாழ்ந்திருப்பதில்லை.

ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண்

பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு மலராய்இரு.. உன்னை மிதிப்பவர்களுக்கு முள்ளாய் இரு.... வாழ்த்துகள்

பாசம் சுமந்தவள் தங்கையாகிறாள்... உணர்வு புரிந்தவள் தோழியாகிறாள்... நேசம் புரிந்தவள் மனைவியாகிறாள்.. உயிர்சுமந்தவள் தாயாகிறாள்.

சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் தான் பெண்கள். மகளிர் தின வாழ்த்துகள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2 April 2024 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்