/* */

கதை சொல்றேன்..விடை சொல்றீங்களா..? விடு..விடு..விடுகதைங்க..!

Tamil Riddles With Answers-விடுகதை என்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு சொல் விளையாட்டு என்றாலும் கூட இது அறிவை வளர்க்கும் ஒரு வழியாகும்.

HIGHLIGHTS

Tamil Riddles With Answers
X

Tamil Riddles With Answers-விடுகதைகள் (கோப்பு படம்)

Tamil Riddles With Answers-புதிரை விடுவிக்கும் கதையே விடுகதை. பொழுது போக்காக இந்த விடுகதைகள் போடப்பட்டாலும் கூட இது ஒரு வகையில் சிந்திக்கும் திறனை வளர்க்கும். மொழி அறிவை வளர்க்கும். இதோ உங்களுக்காக விடுகதைகள்..

  • வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. பாவம்..அவர் யார்? செருப்பு
  • இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? சைக்கிள்
  • ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டைகள். அவை என்ன ? தென்னை மரம்
  • முட்டையிடுவாள் குஞ்சு பொரிக்கத் தெரியாது. கூட்டில் குடியிருப்பாள், கூடு கட்டத் தெரியாது. நன்றாக பாடுவாள். ஆனால், சங்கீதம் தெரியாது. – அவள் யார்? குயில்

tamil riddles with answers

  • அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி. பாதிநாள் தேய்ந்து போவாள். மீதி நாள் வளர்வாள் அவள் யார்? நிலா
  • ஆயிரம் ஆயிரம் பேராக அணி வகுத்தாலும் ஆரவாரம் சிறிதும் இல்லை. அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்
  • கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன? சவப்பெட்டி
  • தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன? வாழை மரம், வாழைத்தார்

tamil riddles with answers

  • நீண்டு வளர்ந்த மலை நடுவே உடன் பிறப்பு இருவர். ஆனால் ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை. அவர்கள் யார்? கண், மூக்கு.
  • கையை வெட்டுவார். கழுத்தை வெட்டுவார். ஆனாலும் அவர் கொலைகாரன் இல்லை. யார் அவர்? தையல்காரர்
  • மாலையானால் சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு என்னவோ இரத்தம் மட்டுமே அவன் யார்? கொசு
  • வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி. அவர்கள் யார்? பூட்டும் சாவியும்

tamil riddles with answers

  • காட்டிலே பச்சை. கடையிலே கறுப்பு. வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு.
  • என்னைத் தெரியாத போது நான் மர்மமானவள். என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவள். நான் யார்? ரகசியம்
  • நடக்கவும் மாட்டேன், ஆனால், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்? கடிகாரம்
  • மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன? ஈசல்
  • நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்? பென்சில்

tamil riddles with answers

  • விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன? தும்பிக்கை
  • கண்ணால் பார்க்கும் அவனை கையால் பிடிக்கமுடியாது அவன் யார்? நிழல்
  • சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன? வாழைப்பழம்
  • வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன? வழுக்கை / பொக்கை
  • கடிக்க முடியாத அவனின்றி உணவே இல்லை.அவன் யார்? தண்ணீர்

tamil riddles with answers

  • கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் பிறந்த நான் யார்? பட்டுத்துணி
  • இவன் வாலுக்கு வையகமே நடு நடுங்கும் அவன் யார்? தேள்
  • படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ? பட்டாசு
  • கருத்த செடியை பிடுங்கலாம்.ஆனால் நடமுடியாது அது என்ன? தலைமுடி
  • உடம்பில்லா அவன் பத்து சட்டை அணிந்திருப்பான்? அவன் யார்? வெங்காயம்

tamil riddles with answers

  • காலையிலும் மாலையிலும் நெட்டையாவேன். மதியம் குட்டையாகிவிடுவேன். நான் யார்? நிழல்
  • கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு
  • மரத்தின் மேலிருந்து தலைகீழாக தொங்குகிறேன். ஆனால் நான் மலைப் பாம்பல்ல. நான் யார் ? விழுது
  • உணவை ஆவலோடு எடுப்பான். ஆனால் அவனால் உண்ணமுடியாது. அவன் யார்? அகப்பை
  • காலையில் வந்த விருந்தாளி மாலையில் மாயமாகிப்போனார். அவர் யார்? சூரியன்

tamil riddles with answers

  • கந்தல் துணி கட்டியவள். முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தாள். அவள் யார்? சோளக்கதிர்
  • இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது. அது என்ன? பட்டாசு
  • ஆலமரம் தூங்க.. அவனியெல்லாம் தூங்க.. சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க.. ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்? மூச்சு
  • கொதிக்கும் கிணற்றில் தைரியமாக குதித்துக் குண்டாகி வருவான்,வெள்ளைக்காரனாய். அவன் யார்? பூரி

tamil riddles with answers

  • கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வருவான், கூட்டம் சேர்த்தும் வருவான் – அவன் யார்? காகம்
  • எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்? செல்போன்
  • பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள் ? வெண்டைக்காய்
  • பார்க்கத்தான் கறுப்பு. ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன? தேயிலைத் தூள்
  • கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? படகு

tamil riddles with answers

  • பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்? சீப்பு
  • கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது? உப்பு
  • பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்? சீப்பு
  • வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
  • காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்? ரேடியோ
  • கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ? உப்பு

tamil riddles with answers

  • ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? கடல்
  • நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லமாட்டான். அந்த நாயகனுக்கோ உடல் மேல் மாளிகை..அவன் யார்? நத்தை
  • முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு தூக்கி அடிப்பான். உயிரை எடுப்பான். அவன் யார்? மின்சாரம்
  • நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ? ஆமை
  • தொப்பொன்று விழுந்த மச்சானுக்கு தொப்பி கழன்று போனது. அவன் யார்? பனம்பழம்

tamil riddles with answers

  • மழைக் காலத்தில் குடை பிடிப்பான். அவன் மனிதனல்ல. அவன் யார்? காளான்
  • ஒற்றைக் குகைக்குள் 32 வீரர்கள். ராணியாக ஒரு நாகம். அது என்ன? வாய், பற்கள், நாக்கு
  • வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்? முட்டை
  • எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ? அடுப்புக்கரி
  • மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன? சிலந்தி வலை
  • நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன், உட்கார்ந்திருக்கும் அவன் உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்? நாற்காலி


  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 5 April 2024 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு