/* */

pain quotes in tamil-உடலில் பட்ட காயம் ஆறிப்போகும்..! உள்ளத்தில் பட்ட காயம் ஆறுமா..?

pain quotes in tamil-வலி என்பது உடலில் பட்ட காயத்தினால் மட்டுமல்ல. அந்த காயங்கள் கூட ஆறிப்போகும். ஆனால், வார்த்தைகளால் ஏற்பட்ட காயங்கள்..காலம் முழுவதும் நின்று கொல்லும்.

HIGHLIGHTS

pain quotes in tamil-உடலில் பட்ட காயம் ஆறிப்போகும்..! உள்ளத்தில் பட்ட காயம் ஆறுமா..?
X

pain quotes in tamil-வலியின் வேதனை மேற்கோள்கள்.(கோப்பு படம்)

pain quotes in tamil-உள்ளத்தின் கதவுகள் கண்கள். உள்ளம் அழுதால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். உணர்வுகளால் துன்பப்படும்போது வலி மிகுதியாகிறது. தவறுகள் இழைத்தவன் தண்டனை பெற்றுத்தானே ஆகவேண்டும். உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். அதுபோல தவறுகள் செய்பவனும் அந்த தவறுகளுக்காக வேதனைப்பட்டே ஆகவேண்டும். அந்த வேதனையின் வெளிப்பாடுகளே வலி. நமது வாசகர்களுக்காக இங்கு வலியை உணர்த்தும் மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.


  • தன்னை காயப்படுத்தியவரை விட்டு மௌனமாக விலகிச் செல்பவர்கள் உண்மையான பக்குவ நிலையை அடைந்தவர்கள்.
  • பிடித்தவர்களின் உதாசீனத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. கண்ணீரால் மட்டுமே விவரிக்க முடியும்.
  • இந்த உலகம் நாம் சொல்லும் உண்மையை விட மற்றவர்கள் சொல்லும் பொய்யைத் தான் அதிகம் நம்பும்.
  • முள்ளின் வலி ஒரு நிமிடம்.. சொல்லின் வலி பல வருடம்..
  • எத்தனையோ துன்பங்களை கடந்துவிட்டேன்.. இருந்தும் மனதில் ஏதோ ஒரு பயம்.. இந்த வாழ்க்கை இன்னும் என்னவெல்லாம் கற்றுத் தரப் போகின்றதோ என்று..
  • வாழ்க்கையின் மிகப் பெரிய பாடங்கள் வலியின் மூலம் கற்றுக்கொள்ளப்படுவதால், சில நேரங்களில் காயப்பட வேண்டியுள்ளது.

pain quotes in tamil

  • சில நேரங்களில் கண்ணீரால் வெளிப்படுத்த முடியாத வலியை கூட, புன்னகை மறைக்கிறது.
  • வலியில்லாமல் நடப்பது ஒரு வரம். வலியைக் காட்டாமல் நடப்பது ஒரு திறமை.
  • வலிகள் தொடங்கும் போது தான், வாழ்க்கை ஏதாவது கற்பிக்க முயல்கிறது.
  • அன்பு புரிந்து உணர வைக்கும். வலிகள் உணர்ந்ததை புரிய வைக்கும்.
  • புதிய தொடக்கங்கள் பெரும்பாலும் வலிமிகுந்த முடிவுகளாக மறைக்கப்படுகின்றன.
  • வாழ்நாள் முழுவதும் வலியை அனுபவிப்பதை விட ஒரு முறை இறந்து விடுவது நல்லது.
  • உலகம் ஒரு வித்தியாசமான கல்லூரி.. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்து விட்டு தேர்வு வைப்பது இல்லை.. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது..
  • முடிந்த வரை மறந்து விடுகிறேன்.. முடியவில்லை என்றால் இறந்து விடுகிறேன்..

pain quotes in tamil

  • காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை..
  • அழுவதால் எந்த பயனும் இல்லை.. ஆனாலும் சில வலிகளை அழுது தான் மறக்க வேண்டியுள்ளது...
  • உண்மை சிறிது நேரம் காயப்படுத்தலாம் ஆனால் பொய் என்றென்றும் வலியை ஏற்படுத்துகிறது.
  • ஏமாற்றம் எனக்குப் புதிதல்ல... நான் ஏமாறும் விதம் தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது.. சில நேரம் அன்பால்.. சில நேரம் நம்பிக்கையால்..
  • விலகி விட்டேன்.. வெறுத்துப் போய் அல்ல, நீ வெறுக்கிறாய் என்று தெரிந்து போய்..
  • இருண்ட இரவுகள் தான் பிரகாசமான நட்சத்திரங்களை உருவாக்குகின்றன.
  • சில நேரங்களில் தவறான தேர்வுகள் நம்மை சரியான இடத்திற்கு கொண்டு வரும்.
  • வலிகளை விட கொடியது சொல்லமுடியாத உணர்வுகளை மனதில் போட்டு புதைப்பது..
  • உன்னை உண்மையாக நம்புபவரிடம் பொய் சொல்லாதே. அது மரணத்தை விட மோசமான வலி. நீ செய்யும்போது தெரியாது. மற்றவர்கள் உனக்குக் கொடுக்கும்போது தான் புரியும்.

pain quotes in tamil

  • வலிகள் ஒருவனை சிந்திக்க வைக்கிறது. சிந்தனை ஒருவனை புத்திசாலியாக்குகிறது.
  • எத்தனை கோபத்திலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அடிகளை விட அது தரும் வலிகள் அதிகம். பின் எத்தனை மன்னிப்பு கேட்டாலும் அது மாறாது, மறையாது.
  • நம்மால் ஒருவருக்கு பிரச்சினை வருவதென்றால், அந்த இடத்தை விட்டு விலகி விட வேண்டும். அது உறவானாலும் சரி, உயிர் நட்பென்றாலும் சரி..
  • நேற்று வரை முக்கியமாக இருந்த நாம், நாளைக்கே யாரோவாக உணரப்படுவோம் என்று அறிந்த அந்நொடி அமைதியாய் விலகி விடுவது நல்லது.!
  • உங்களை விமர்சிப்பவர்களை கண்டுகொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்தது உங்களைப் பற்றிய வதந்திகள் மட்டுமே.. உங்கள் வலிகள் அல்ல..
  • உணர முடியாத சந்தோஷத்தைக் கொடுப்பதும் உணர முடியாத வலிகளைக் கொடுப்பதும், மனதிற்குப் பிடித்தவர்களால் மட்டுமே முடியும்.
  • காயத்தை ஆற்றுவது, காயப்பட்டதை விட மிகவும் வேதனையானது.
Updated On: 12 Sep 2022 6:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...